
அணைக்க தவறியது யார்??
எரியும் நெருப்பை அணைக்க தவறியது யார்??
எங்கும் கேட்கிறது கதறல் ஒலி
இன்னும்
குருதி வாடை விசுகிறது
பூக்களை தேடுவது சரியோ
இயந்திரமாய் வாழும் மக்களுக்கு
அன்பு என்பது பதம் மட்டும் தானோ
ஓடுகின்ற கழிவில் புழுவாய் நெளியும் உங்கள் வாக்கு உறுதிகள்
முதலைகளிடமிருந்து மீள இன்னும் எத்தனை காலம் ....