ஈன்று வளர்த்த தாய்க்கு .......


உறக்கம் இழந்த நம் கண்கள்
மழை காற்று கடும் வெயில்
பாராது உறவை தேடித்திரிந்தோம்
வழியெங்கும் ரத்தம் தெளித்த
தாய் திருநாட்டில் நம் இடம் எது ...?

ஈன்று வளர்த்த தாய்க்கு என்ன செய்தோம்
என்ற கணத்துடன் வாழும் எம் சொந்தமே ...
எழுவோம் வருவோம் காப்போம்
நம் தாய் மண்ணை மீட்போம்

உன் நினைவுகளுடன்


சிலிர்க்க செய்யும் காற்று
மெல்ல எட்டிபார்க்கும் சூரியன்
கரையை அலசும் நதி
சுமக்க முடியாத உன் நினைவுகளுடன்
காத்திருக்கிறேன் இன்னமும்

நண்பா உன் முகம்


முதலில் பார்த்தது என் தாய் முகம்
பிறகு பார்த்தது என் தகப்பன் முகம்
என்று காண்பேன் நண்பா உன் முகம்

நம் நட்பு


ஓரு போதும் சுற்றும் உலகம் நிற்பது இல்லை..
ஓரு போதும் வீசும் காற்று நிற்பது இல்லை..
ஓரு போதும் கரும்பின் சுவை மாறுவது இல்லை..
அது போல தான் நம் நட்பு ?

பூக்கள் பூத்து தீர்வது புதிது இல்லை ..
தேனிக்கள் தேன் சேர்ப்பது புதிது இல்லை ..
பூத்தலும் சேர்த்தலும் புதிது இல்லை..
ஆனால் நம் நட்பு அது போல இல்லை....

நமக்காக காத்திருக்கும்


அசைதலுக்கு காத்திருக்கும் மரம்...
மழைக்காக காத்திருக்கும் நிலம்..
உன் நட்பிற்கு காத்திருக்கும் நான்..
நமக்காக காத்திருக்கும் நட்பு..

உன்னை தேடுவது


கண்கள் நான் சொல்வதை காண்பது இல்லை
ஏன் என்று தெரியவில்லை
மழை நீர் மண்ணுக்கு வருவது புதிதில்லை
உன்னை தேடுவது கூட தான் நண்பா