மோகத்தின் ஆட்டத்தில் நினைவை இழந்து
புதையல்யென நினைத்து புதைகுழிக்குள் இறங்கி
தொலைத்தேன் என்னை
ஆழத்தின் வலி அறியாமல் ஏதோ இதமான சுகத்திற்கு
ஒரு முறை மறுமுறையென பலமுறை விழுந்தேன்
பகிர்ந்த சுகம் சில கணங்கள் தான்
இந்த கணம் வரை தொடரும் வலி எனக்கு மட்டுமே.......

