தவழுகையில் இருகரங்களையும்

தவழுகையில் இருகரங்களையும்    இறுக்கியப்படி
நீண்ட தூரம் ஆயினும் அனைத்த படி
அவ்விரண்டு கரங்கள்
வாழ்வின் பாதி வரை வந்தது.
திடீர் என்று அவ்விரண்டு கரங்களை விலக்கி
வேறு கரம் உன்னை பிடிக்க வாழ்வின்
மீதிக்காக பற்றினாய்.
வந்த கரம்  பத்திரமாய் இங்கு இருக்க
வளர்த்த கரத்தை இங்கே   ஏந்தவிட்டது ஏன்

தெருவில் அந்த இருக்கரங்கள் ஏந்திய படி
இப்போதும் உன் நினைவில் வாழ்ந்த படி.......

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

நிலவின் ஒளியை கண்டு




நிலவின் ஒளியை கண்டு
பூக்கும் பூக்கள் கண்டு
இப்படியாக எல்லாவற்றையும் கண்டு
வியந்தேன் உன்னை காண்பதற்கு முன் .
வியந்த எல்லாவற்றையும் வெறுத்தேன் கண்ட பின்.
வியந்தது சரியா வெறுத்தது தவறா
என் குறையா நான் உன்னை பார்த்த பிழையா ......
யார் சொல்வார்கள் தீர்ப்பை
அல்லது நீயே சொல்லிவிடு விடையை.

தொடரும் வலி


மோகத்தின் ஆட்டத்தில் நினைவை இழந்து
புதையல்யென நினைத்து புதைகுழிக்குள் இறங்கி 
தொலைத்தேன் என்னை 
ஆழத்தின் வலி அறியாமல் ஏதோ இதமான சுகத்திற்கு 
ஒரு முறை மறுமுறையென பலமுறை விழுந்தேன் 
பகிர்ந்த சுகம் சில கணங்கள் தான் 
இந்த கணம் வரை தொடரும் வலி எனக்கு மட்டுமே.......

அளவிட

  

அளவிட முடிந்தது இதயதின் துடிப்பை
முடியவில்லை நினைவை
அளவிட முடிந்தது குருதியின் ஓட்டத்தை
முடியவில்லை உணர்வை
அளவிட முடிந்தது பகலின் வெளிச்சம்
முடியவில்லை வாழ்கையின் இருளை
இப்படி அளந்து கொண்டு இருக்கிறான்
காலங்களைக்கடந்து....